1915 நடந்த முஸ்லிம் சிங்கள கலவரத்தின் பின்னர், அமுல்ப்படுத்தப்பட்ட martial lawஇன் அடிப்படையில் இலங்கை முழுவதும் உள்ள சிங்களவர்களிடம் இருந்து கலவரத்தால் ஏற்பட்ட பொருளாதார இழப்பீடு என்ற பெயரில் கட்டணம் வசூலிக்கப்பட்டது. அன்று 50, 60 சதங்கள் கணக்கில் உழைத்து கொண்டிருந்த கூலித் தொழிலாளர்களிடமிருந்தெல்லாம் 6000, 7000 தண்டனை கட்டணமாக கோரப்பட்டது. அந்த தொகையை கட்ட முடியாதவர்கள் கைது செய்யப்பட்டு, அவர்கள் உடமைகள் பறிக்கப்பட்டது. கண்டியில் நடந்த கலவரத்துக்கு எப்படி இலங்கை முழுவதும் உள்ள சிங்களவர்கள் பொறுப்பாவார்கள்? குறிப்பிட்ட கலவரத்தை தொடக்கி வைத்த வெளிநாட்டு முஸ்லிம் வார்த்தகர்களின் அரசியலையும் நாம் இங்கே புரிந்து கொள்ள வேண்டிய தேவை இருக்கிறது. கண்டியில் உள்ள இலங்கையை சேர்ந்த சோனகர்களும், அவர்களின் பள்ளிவாசல் நிர்வாகமும் குறிப்பிட்ட பௌத்த பெரஹேராவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை, ஆனால் ஒட்டுமொத்த சோனகர்களும் எதிர்ப்பு தெரிவித்தது போல் தான் சித்தரிக்கப்பட்டது. அன்று பொன்னம்பலம் ராமநாதன் Martial lawக்கு எதிராக வாதாடினார் என்று சொல்லும் போது, இலங்கை முழுவதும் உள்ள சிங்களவர்கள் மீ...
இன்று இலங்கையின் ஆளுங்கட்சியாக இருக்கும் JVP அல்லது NPPஐ ஏதோ ஒரு மாபெரும் புரட்சிக்கர இயக்கம் போல சிலர் சித்தரிப்பதை பார்த்தால் வேடிக்கையாக இருக்கிறது. சிங்கள தேசத்துக்குள் இருந்த இடதுசாரி அமைப்புகளை, அதிலும் குறிப்பாக தமிழர்களின் அடிப்படை உரிமைகளுக்காக குரல் கொடுத்த சிங்கள இடதுசாரி அமைப்புகளை தேடி தேடி வேட்டையாடி கொன்று குவித்த JVP எப்படி ஒரு புரட்சிக்கர அமைப்பாகும். ? அது சிவப்பு சட்டை அணிந்த மற்றுமொரு சிங்கள இனவாத அமைப்பு தான்! சரி கதைக்கு வருவம். 70கள் காலப்பகுதிகளில், JVPயின் முதல் கிளர்ச்சி/புரட்சி (ஏதோ ஒன்று) எப்படி தோல்வியில் முடிந்தது என்று தேடி பார்த்தால், ஒரு நல்ல ஜனரஞ்சக நகைச்சுவை திரைப்படத்துக்கான 10-15 scriptsஏ அதில் கிடைத்து விடும். மார்ச் 3ஆம் திகதி 1971ஆம் ஆண்டு, தென்னிலங்கையில் உள்ள JVP தலைவர் ரோஹன விஜயவீரவின் வீட்டில் ஒரு கூட்டம் ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டது. இலங்கையில் உள்ள ராணுவ முகாம்கள் மற்றும் காவல் நிலையங்களை ஒரே நேரத்தில் தாக்குவது தொடர்பான திட்டம் பற்றி பேசுவதற்காக நடத்தப்பட்ட கூட்டம் அது. அந்த நேரத்தில் JVPக்குள் ஒரு சகோதர ய...